1.6.09

நவரசம்

காதல்
--------
அன்பு, பாசத்தின் மறுவடிவம்..,
ஆயுள் வரை
தொடர்ந்தாலும்,
பருவ வயதில்
மட்டுமே பிரபலம்...

வீரம்
------
இறைவன் படைப்பில்
அனைத்து உயிர்களுக்கும்
பொதுவானது...
இதுவே,
தற்காப்பின் கருவானது...

சோகம்
---------
இழப்பின் வெளிப்பாடு.
தோல்வியின் வலி...
முயற்சியின் முட்டுக்கட்டை...

புன்னகை
------------
மனிதனை,
பிற உயிர்களினின்றும்,
பிரித்துக் காட்டும்...
பிற மனிதர்களினின்றும்
உயர்த்திக் காட்டும்....

வியப்பு
---------
புதிதாய் கண்டால்
பிறப்பது...


வெறுப்பு
-----------
ஆசையின் எதிராளி...
இது,
கோபத்தின் உச்சக்கட்டம்...

அச்சம்
---------
நன்மை செய்ய
இதனை,
ஏற்க வேண்டாம்...
தீமை நினைத்தாலே,
இதற்கு
அடி பணிய வேண்டும்...

சாந்தம்
---------
தக்க தருணத்தில்,
கடைபிடித்தல் நன்று...
இல்லையேல்
விளைவுகள் விபரீதம்..

கருணை
------------
இதைக் கொண்டால்,
மனிதன்,
இறைவனின் மறு உருவம்

8 comments:

நட்புடன் ஜமால் said...

காதல்

சாந்தமாக வெளிப்பட்டு

கருணையானது

அருமைங்க

தமிழ்ப்பிரியா said...

நன்றி ஜமால்...
தங்களின் முதல் வருகைக்கு..

Sanjai Gandhi said...

புன்னகை - அழகு..

தமிழ்ப்பிரியா said...

நன்றி Sanjai...
தங்களின் முதல் வருகைக்கு..

Anonymous said...

come and write tamil tech blog. good response now. it is my experience

தமிழ்ப்பிரியா said...

//come and write tamil tech blog. good response now. it is my experience//
Thank u for ur visit.. Sure, I ll try

"உழவன்" "Uzhavan" said...

நவரசம் சுவையாக இருந்தது.

G.VINOTHENE said...

keep it up..nalla iruku.:)

Post a Comment