5.5.09

வரம் வாங்கி வந்தேன் - 1

தனலக்ஷ்மி நான்கு மாத கற்பிணி.கணவர் சந்தானத்துக்கோ நிரந்தரமில்லாத தொழில்.ஏற்கனவே இரண்டு மகன்கள் வேறு.இவள் கற்பிணியாக இருக்கும் செய்தி உறவினர்களுக்கும், அண்டை வீட்டார்க்கும் தெரிய வந்தது. மூணு வேள சோத்துக்கே வழி இல்ல. இவளுக்கு மூணாவது புள்ள கேடா? என்று நேராகவும் மறைமுகமாகவும் இழிப்பேச்சு பேசினர். இன்னும் ஒரு படி அதிகம் போய் ஒரு சிலர், கன்னு குட்டி மாதிரி ரெண்டு ஆம்பள புள்ளைங்க வச்சிருக்க. பேசாம கலச்சிடு என்று அறிவுரை(!!!) கூறினர்.

இவர்களின் பேச்சுக்கு செவி மடுத்தவளாய், குழந்தை வேண்டுமா என்று யோசித்துக் கொண்டே மருத்துவமனை நோக்கி நடக்கிறாள். பல்வேறு மனப்போராட்டத்திற்குப் பின் வேண்டாம் என முடிவு செய்து மருத்துவரை சந்திக்கிறாள்.டாக்டரம்மா நாலு மாசமா முழுகாம இருக்கேன். ஏற்கனவே ரெண்டு பசங்க வேற.இந்த கருவ கலைச்சு விட்ருங்க என்று கண்ணில் நீர் ததும்ப கூறினாள். மருத்துவர் பரிசோதித்து விட்டு, இங்க பாரு தனலக்ஷ்மி குழந்தை நல்ல வளர்ச்சி-ல இருக்கு,இப்ப கருகலைப்பு பண்ணா உன் உயிருக்கு தான் ஆபத்து. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கருக்கலைப்பும் ஆபத்தான காரியமாக தான் இருந்தது.

மருத்துவர் மருத்துவிட்டதை அன்று இரவு சந்தானத்திடம் கூறினாள். எனக்கு என்ன ஆனாலும் பரவாலங்க.இப்ப நாம இருக்குற நெலமைல மூணாவது வேணாங்க என்று அழுத்தமாக கூறினாள். யார கேட்டு இப்டி முடிவு பண்ண? என் உடம்புல தெம்பு இருக்குர வரக்கும் என் புள்ளைங்களுக்கு நான் உழைப்பேன் டி.ஊர்ல யேசுனவுங்களா சோறு போட போறாங்க? .நீ இல்லாம என்னால இருக்க முடியுமா?நம்ம் பசங்கள பத்தி யோசிச்சியா? என்று சற்று கோபத்துடனே கூறினார் சந்தானம்.இப்ப ரெண்டு பசங்களுக்காக உழைக்கிறோம்.இனி மூணுக்கா உழைக்கலாம் என்று அவளை சமாதானம் செய்தார்.

தனலக்ஷ்மி, இன்னைக்கு பேங்க் கிளார்க் பரிட்ச.போய்ட்டு வரேன். நீ சாப்ட்டு தூங்கு. எனக்காக காத்திருக்காத என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார் சந்தானம். இப்ப என்ன பரிட்ச என்று ஒன்றும் புரியாதவளாய் தன் வேலைகளை தொடங்கினாள்.மூன்று மாதம் கழித்து வங்கி தேர்வு முடிவுகள் வெளி வந்தன. சந்தானமும் தேர்வாகி இருந்தார். அவர்கள் இருந்த அதே ஊரில் உள்ள ஒரு அரசு வங்கியில் அவருக்கு வேலையும் கிடைத்தது.இப்பொழுது ஏசிக்கப்பட்ட குழந்தை யோகமாக பேசப்ப்ட்டது. அனைவரும் உன் குழந்தை பெறக்குறதுக்கு முன்னாடியே அப்பாவுக்கு கவுர்மென்ட் உத்தியோகம் குடுத்துருக்கு. யோகக்காரப் புள்ள என்று அதே ஊரார் இன்று வாழ்த்தினர்.இதை மகிழ்ச்சியுடன் சந்தானத்திடம் கூறினாள் தனலக்ஷ்மி. அடி போடி இந்த வேலைக்கு எத்தன நாள் கண்ணு முழுச்சேன்னு எனக்கு தான் தெரியும்.யோகமாம் யோகம் என்று நக்கலடித்துக்கொண்டெ படுத்தார். இருந்தாலும் அவர் மனதிற்குள் நெகிழ்ச்சி.இத விட சின்ன வேலைக்கெல்லாம் முயற்சி பண்ணேன். அப்ப எல்லாம் வேல கிடைக்கல. சும்மா பரிட்ச்ச மட்டும் எழுத்ப்பாக்கலாம்னு இருந்தேன். வேல கிடைச்சுருச்சு. ஒரு வேள இந்த குழந்தயின் ராசியா இருக்குமோ? என்று யோசித்துக்கொண்டே தூங்கினார்.
தொடரும்...

2 comments:

Muniappan Pakkangal said...

Kuzhanthaiyin raasi-25 years back,nalla irukku.

தமிழ்ப்பிரியா said...

நன்றி முனியப்பன் சார்...
தங்கள் வருகைக்கு....

Post a Comment