5.5.09

வரம் வாங்கி வந்தேன் - 2

சந்தானம் அலுவலகம் செல்ல தொடங்கினார். குடும்பம் ஓரளவு நல்ல நிலையை எட்டியது. இத்தனை நாள் வேண்டா வெறுப்பாக பழகிய உறவுக்காரர்கள். இப்பொழுது பாசத்துடன் பழகினர். இதற்கும் அந்த மூன்றாவது குழந்தையே போற்றப்பட்டது. ஒரு நாள் தனலக்ஷ்மி கற்பிணி என்பதை கண்ட குறி சொல்லும் பெண் காசுக்காக, அம்மணி சிங்ககுட்டி வரப் போறான், என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னாள். ஆத்திரம் கொண்ட தனலக்ஷ்மி பொறுக்காதவளாய், இங்க யாரும் உன் கிட்ட கேக்கல, வேற வீடு பாரு என்று கோபமாக சொன்னாள்.



சித்தி என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள் மீனா. இவள் சந்தானத்தின் அண்ணன் மகள். இரு குடும்பத்திற்கும் பகை. காரணம், சந்தானத்தின் தாய் தங்கம்மாள். சில வருடங்களுக்கு முன்னர், கூட்டு குடும்பமாக தான் இருந்தனர். தனலக்ஷ்மி சற்று வறுமையான குடும்பத்து பெண் என்பதால், மூத்த மருமகளுக்கு அதிக உரிமைகள் கொடுத்தார், தங்கம்மாள். இதனால் தனலக்ஷ்மியின் மீதான கொடுமைகள் அதிகரித்தன. இதனை சந்தானம் பொறுக்க முடியாமல் தனி குடித்தனம் சென்றார். அத்துடன் இரு குடும்பங்களின் பேச்சு வார்த்தயும் நின்று விட்டது.தங்கம்மாள் சந்தானத்தின் வீட்டை மிதிப்பதில்லை என்று சபதம் செய்தார். இருப்பினும் மீனா மட்டும் தனலக்ஷ்மியின் மீதுள்ள பாசத்தினால் பேசுவாள்..



என்ன சித்தி சோகமா இருக்கீங்க என்றாள் மீனா. குறி சொல்லும் பெண் கூறியதை விவரித்தாள் தனலக்ஷ்மி. என்ன சித்தி, நீங்க வேணா பாருங்க தங்கச்சி பாப்ப்பா தான் பிறக்கும் என்று சவால் விட்டாள் மீனா. அதில் மகிழ்ந்தவளாய், அப்டி மட்டும் நடந்ததுனா உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கி தறேன் என்று உறுதி அளித்தாள் தனலக்ஷ்மி. பிரசவத்திற்கான நாட்கள் நெருங்கின.

சதீஷ்,சந்தோஷ் என்ற குரலுக்கு ஓடி வந்தனர். என்ன மா என்றான் சந்தோஷ், தனலக்ஷ்மியினுடைய மூத்த மகன். கெட்டிக்காரன்.இவன் செய்யும் குறும்புகளுக்கு அடி வாங்குவது சதீஷ் தான். சதீஷ் தனலக்ஷ்மியின் இரண்டாவது மகன். சுறுசுறுப்பானவன். சற்று கோபக்காரனும் கூட. அம்மா, அம்மாச்சி வீட்டுக்கு போறேன்.நீங்க ரெண்டு பேரும் அப்பாவுக்கு தொல்ல கொடுக்காம ஒத்தாசையா இருக்கனும். நல்லா படிங்க.சதீஷ் அழ தொடங்கினான். அழாத சதீஷ், அம்மா பாப்பாவோட வருவாங்க என்று பெருமையுடன் கூறினான் சந்தோஷ். அம்மா எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும் என்றான் சந்தோஷ். பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தனக்கு அடுத்ததும் ஆண் குழந்தை தான் என்று நம்பினாள் தனம். ம்ம்ம்.. அப்பிடின்னா, சாமி எங்களுக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும்னு வேண்டிக்கோங்க.... அவள் சொன்ன மாத்திரத்தில் இருவரும் ஒரு சேர சாமி எங்களுக்கு தங்கச்சி பாப்பா குடு என்றனர். சிரித்துக்கொண்டே விடை பெற்றாள்.

பிரசவத்திற்காக மதுரையிலுள்ள தன் தாயின் வீட்டிற்கு வந்தாள் தனம்.பெண் குழந்தைக்காக அனைத்து தெய்வங்களிடமும் வேண்டினாள். இருப்பினும் ஆண் குழந்தை என்றாலும் பரவாயில்லை என்று தானே பக்குவப்பட்டாள். அம்மா வீட்டில் இருந்தாலும், எந்நேரமும் சதிஷ், சந்தோஷைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள்.அவங்களே தனியா எல்லா வேலையும் பாக்கணும் என்று சந்தானத்தை நினைத்து புலம்பிக்கொண்டே, ஆள் இருந்தும் ஒத்தாசைக்கு வரமாட்டேங்குராங்க என்று தன் மாமியாரையும் கடிந்து கொண்டாள். ஒரு நாள் கொட்டாய்க்கு(திரையரங்கம்) போய் வருஷமாச்சு. போலாம்மா என்று தன் அம்மாவையும், அண்ணியையும் அழைக்க, அவள் ஆசையை மறுக்க முடியாமல் மூவரும் திரையரங்கம் சென்றனர். பாதி படத்தினூடே அவள் வலியை உணரவே மூவரும் மருத்துவமனைக்க்கு விரைந்தனர்.மூன்று மனி நேரம் சென்று அழகான குழந்தை பிறந்தது. அந்த வலி மயக்கத்திலும் மருத்துவரிடம் என்ன குழந்தை என்று ஆர்வமாக கேட்டாள் தனம்.
தொடரும்...


4 comments:

கார்க்கிபவா said...

நான் தான் முதல் பின்னூட்டமா???

புதியவர் என்றாலும் அதிகம் பிழை இல்லாமல் இருப்பது அருமை..

என்ன குழந்தை என்று தெரிய எனக்கும் ஆர்வம்தான்.. சீக்கிரம் எழுதுங்க..

ஆனா ஒன்னு.. எடுத்த உடனே தொடர்கதை எழுதினா பிச்சிக்கிட்டு ஓடிடுவாங்க...

Muniappan Pakkangal said...

Dhanathin penn kuzhanthai meethaana aasai,thirai arangathil pirasava vali, unmai kathai,ungal manasai paathicha ninaivugal.

தமிழ்ப்பிரியா said...

நன்றி கார்க்கி...
ஏதோ நம்மால முடிஞ்சது...
நேயர் விருப்பம் தெரிந்தால் பதிவிட சுலபமாக இருக்கும்...
தங்கள் விருப்பம் என்னவோ?

தமிழ்ப்பிரியா said...

நன்றி முனியப்பன் சார்...
இது கற்பனை மட்டுமே அல்லாமல்
நிஜமொன்றுமில்லை பராபரமே!!!!

Post a Comment