18.5.09

பிரிவுகள் தாராயோ !!!

உப்பில்லை, உறைபில்லை என்று
அம்மாவின் சமையலை
குறை கூறாத
நாளில்லை...
விடுதியில் சாப்பிடும்பொழுது தான்
அம்மாவின் சமையலை
ருசிக்க நா ஊறுகின்றது.
அப்பாவிடம் சண்டை போட்டு
பணம் வாங்கிய மகிழ்ச்சியுடன்
'நானும் சம்பாதித்து செலவழிப்பேன்'
என்ற சபதமும் இருக்கும்.
நிறைவேறியது சபதம்
மட்டும் தான்.
அந்த மகிழ்ச்சி மட்டும்
எங்கு போனதோ
புரியவில்லை.
அக்காவுக்கு தெரியாமல்
அவள் பட்டு பாவடையை
அணிந்த போது
கிடைத்த ஆனந்தம்
அவள் திருமணத்திற்கு பின்,
அதே பாவாடையைக் காட்டி
இனி இதெல்லாம் உனக்கு தான்
என்று அம்மா சொன்ன போது
கிடைக்கவில்லை.
அண்ணனுடன் போட்டி போட்டு
சாப்பிட்ட அப்பளத்தின் ருசி
அண்ணன் வெளிநாடு
போன பிறகு
தனியாக எத்த்னை
அப்பளம் சாப்பிட்டாலும்
கிடைக்கவில்லை
விடுதிக்கு சென்ற போது தான்
அம்மாவின் அன்பு புரிந்தது...
வேலைக்கு சென்ற போது தான்
அப்பாவின் பாசம் புரிந்தது...
அக்காவின் திருமணத்திற்கு பின்பு தான்
அவளுடனான இணக்கம் புரிந்தது...
அண்ணன் வெளிநாடு போன பின்பு தான்
அவனுடனான நட்பு புரிந்தது...
இறைவா!!!
என் உறவுகளின்
இனிமை புரிய
தக்க தருணத்தில்
பிரிவுகள் தாராயோ!!!

2 comments:

Muniappan Pakkangal said...

En uravuhalin inimai puriya thakka tharunathil pirivuhal thaaraayo-super finishing for a super kavithai.

தமிழ்ப்பிரியா said...

நன்றி முனியப்பன் சார்

Post a Comment