14.5.09

துப்பாக்கி தேவை

காதலனின் தடாலடி
நீ சொன்னாய் என்பதற்காகத்தான்
உனது அப்பாவிடம் பேசிப்
பார்க்கலாம் என்ற முடிவுக்கு
வந்தேன். ' அலுவலகத்தில்
இருக்கிறேன், நீல்கிரீஸில்
சாயங்காலம் சந்திக்கலாம்' என
உன் தகப்பன் தொலைபேசியில்
சொன்னபோது கடமை தவறாதவரின்
மகளைத்தான்
காதலித்திருக்கிறோம் என
இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து
மணிக்கெல்லாம் வ்ந்தமர்ந்த
உன் தகப்பனைப் பார்த்த போது
'எருமை மாட்டிற்கு மான்
குட்டி எப்படி பிறந்தது?!'
என்ற பழைய கவிதை தான்
நினைவிற்கு வந்தது.
மான்குட்டி என்ற வர்ணனை
உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது
உன் அப்பனுக்கு மிகக்
குறைந்த பட்சம்தான். அந்த
கடையில் பில் போடுவதற்காக
இருந்த கம்ப்யூட்டரைத் தவிர
மீதம் இருந்த அனைத்தையும்
தின்று தீர்த்துவிடும் வெறி
அவரது கண்களில் மின்னியதை
நான் கவனிக்கத்
தவறிவிட்டேன். சரி எதையாவது
சாப்பிட்டுவிட்டு பேச்சை
துவங்கலாம் என சர்வரை
அழைத்தேன். அதன் பின்
உன் அப்பனின்
கைங்கர்யத்தால் சமையலறைக்கும்
டேபிளிற்கும் இடையே
சுமார் ஐம்பது
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

ராயப்பாஸிலும்,
தலப்பாக்கட்டிலும், நீ புஃல்
கட்டு கட்டுவது உன் ஜெனிடிக்
பிரச்சனை என்பதைக்
கண்டுகொண்டேன்.
அவரது வேட்டையை முடிவுக்கு
கொண்டு வர இயலாதவனாக கையறு
நிலையில் இருந்த போது 'தம்பி
இப்பெல்லாம் முன்ன மாதிரி
சாப்பிட முடியறதில்லபா...
வயசாச்சில்ல..' என் தன்
திருவாய் மலர்ந்தார்.
திடப்பொருட்களிலிருந்து
ரோஸ்மில்க் பொன்ற திரவப்
பொருட்களுக்கு மாறினார்.
அப்பாடா, முடித்துவிட்டார்,
என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா'
என்ற வார்த்தையில்
உடைத்தார்.
'தம்பி எப்ப சாப்பிட்டாலும்
கடைசியா ஒரு ஐஸ் க்ரீம்
சாப்பிடுறது நல்லதுப்பா'
என்ற அவரது கூற்றில் இருந்த
கடைசியா எனும் வார்த்தைதான்
என் வாழ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'சார், நான் உங்க பொண்ணை
விரும்புறேன்.அவளையே
கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன். அது விஷயமா
பேசத்தான் உங்களுக்கு போன்
பண்ணினேன்' என்று மல்ல
பேச்சை துவங்கினேன்.
'தம்பி ! இது பெரிய விஷயம்,
ஒரு நாள்ல
பேசித் தீர்த்துவிட
முடியாது.நீங்க ஒன்னு
பண்ணுங்க.. நாளைக்கு
சாயங்காலம் அன்னபூர்ணா
வந்திடுங்க... அங்க பேசிக்கலாம்' என்ற உனது
தகப்பனை கொலை செய்ய அந்த
நேரம் துப்பாக்கி
இல்லாமல் போனது
என் துர்பாக்கியமே.

காதலியின் பதிலடி
முட்டாள் காதலனே !
இத்தனை நாள் நீ
பேக்கு என்று எனக்கு
மட்டும் தான் தெரிந்திருந்தது.
அதை என் வீட்ட்ற்கும்
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாயே...
மான் குட்டியின் தந்தை
எப்படி எருமை மாடாகும்?
என் தந்தையும் கவரி மான் தான்...
உன்னை சந்திதது என் தந்தை அல்ல...
அடி முட்டளான உன்னை சோதிக்க
என் புத்திசாலி தந்தை
அனுப்பியது அவர் அலுவலக வேலைக்காரரை.....
காதலுக்கு தான் கண்ணில்லை....
உனக்குமா இல்லை....
யாரோ ஒருவனை என்
தந்தை என்று நம்பி உன்
பர்ஸை காலி செய்தாயே
என் பாசமிகு காதலா
என் தந்தையின் ஆசை
தனக்கு ஒரு புத்திசாலி
மருமகனாக வேன்டுமென்று...
என் தந்தைக்கும் வேறொருவனுக்கும்
வித்தியாசம் பார்க்க தெரியாத உன்னால்
வாழ்வில் நல்லது கெட்டது
பார்க்க தெரியாது
என்பது என் ததையின் எண்ணம்.
என் தந்தையின் தேர்வில்
தோற்றுவிட்டாயே ...
என் முட்டாள் காதலா...
இனியாவது பிறரை
நக்கலடிப்பதை விட்டு விட்டு
உன் பார்வையை மாற்று...
ஏதேதோ நிறைய வாங்கிகொடுத்து
எங்கள் வேலைக்காரரை
ஏமாத்திட்ட. அவரும்
உன்னை 'ரொம்ப நல்லவரு' ன்னு
சொல்லிட்டாருப்பா....
நாளையாவது என்
தந்தை வரும்போது இப்படி
பேக்கு மாதிரி இல்லாமல்
ஒழுங்காக நடந்து கொள்.
இல்லாவிட்டால், உன்னைக்
கொல்ல நான் துப்பாக்கி,
தேட வேண்டி இருக்கும்.

7 comments:

Vishnu - விஷ்ணு said...

பதிலடி சூப்பர்.

தமிழ்ப்பிரியா said...

நன்றி விஷ்ணு...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல ஜோடி தல..

மாத்தி மாத்தி துப்பாக்கி தூக்குதுகளே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கோயமுத்தூர் பிண்ணனியில் மலைக்கோட்டை மாநகரிலிருந்து...............

தமிழ்ப்பிரியா said...

'தல' ன்னு சொல்லி பெரிய ஆளாக்கிட்டீங்களே சுரேஷ்!!!!!!!!
வருகைக்கு நன்றி

Muniappan Pakkangal said...

Kaathalanum thuppakki theduraan,kaathaliyum thuppakki theduraa,Kalyanathula thuppakki gundu satham undaa.

தமிழ்ப்பிரியா said...

muniappan sir!!!
Super Idea... Thank u

Post a Comment