
என் அடையாள எண்...
இன்று வரை மட்டுமே...
நான் பயன்படுத்திய
கணிப்பொறியும், இருக்கையும்
இனி யாருக்கோ?
ஆனால்,
என் அலுவலகம் உள்ள வரை,
இந்த அடையாள எண்
குறிப்பது என்னை மட்டுமே...
குடும்பம், நட்பு என்று
வீட்டுப் பறவையாக
இருந்த என்னை,
வெளி உலகை
காண்பித்தது,
இவ்வலுவலகம் தான்...
தாமதம் செய்யாதே....
பொறுமை பழகு....
கோபம் கொள்ளாதே....
பிறருடன் அளவாக பேசு...
எச்சரிக்கையாய் இரு....
இது போன்ற,
இன்னும் பல ஆலோசனைகளை,
செவிவழி கேட்டிருந்தாலும்,
அனுபவப்பட்டு கற்றது,
என் அலுவலகத்தில் தான்...
எனக்கு முதல்
வேலை வாய்ப்பளித்த,
என் அலுவலகமே!!!
இன்றுடன் உன்னை பிரிகின்றேன்...
முதல் பள்ளி,
முதல் வண்டி,
வரிசையில்,
இன்று நீயும் - என்
"முதல் அலுவலகம்"
என் உயிர் உள்ள வரை...